Friday, January 30, 2009

Headaches are Contagious


(Pencil sketch - KRTY)

தலைவலி என்பது தொற்று நோய் வகையைச் சார்ந்தது. ஆம் ! Unlike matter, Headaches can be created, destroyed and, of course, be effortlessly transformed to many forms.

உங்களுக்குத் தலைவலி இருக்கிறதா ? உங்கள் வலியின் தீவிரத்தைப் பொறுத்து உங்களைச் சுற்றி இருப்பவர்களை தலைவலி பற்றப்போகிறது என்பதை உணர்க.

தலைவலியை பொதுப்படையாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒரு வகை பின்னங்கழுத்திலோ மேல் முதுகிலோ, முகத்தில் இருக்கும் நரம்புகள் மூலமாகவோ, அல்லது பல்வேறு உடல் உபாதை காரணங்களால் உண்டாகும் உண்மையான வலி. இது பற்றி எழுத இதற்குமேல் எனக்குத் தெரியாது. இங்கே படிக்கவும்.

இன்னொரு வகை, இருபத்து ஓராம் நூற்றாண்டின் டென்ஷன்கள் அனைத்தும் தலையில் அழுத்துவதால் ஏற்படும் தலைவலி. உதாரணத்திற்கு என்னையே இங்கே குறிப்பிடுகிறேன்.

அனைவரும் வெறுக்கும் the so-called "Mechanical life" எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் காரணம் பெரும்பாலோனோருக்குப் பிடிக்காது என்பது. முக்கிய காரணம் routineல் உள்ள சுகம்.திங்களிலிருந்து வெள்ளி வரை எல்லாமே சமச்சீராக இருக்கும். அடுத்து என்ன என்பது எனக்குத் தெரியும்.

காலை ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் விழிப்பு.. காலைக் கடன்கள்.. பின் கனிவு கொடுக்கும் நல்ல காப்பி.. கொஞ்சம் உடற்பயிற்சி.. "இந்த நாள் இனிய நாளா ?" என்று ஆபீஸ் இன்பாக்ஸைப் பார்ப்பது.. ப்ளாக் எழுதுவது.. எவ்வளவுதான் சீக்கிரம் விழித்தாலும் கடைசி நிமிடத்தில் அடித்துப்பிடித்து குளிப்பது.. ஊட்டிவிடப்படும் இட்லியை சுவைப்பது.. அப்பாவோடு வண்டியில் துரத்திப்பிடித்து ஆபீஸ் வேனுக்குள் புகுவது.. வேனில் கொஞ்சம் புத்தகம்.. கொஞ்சம் தூக்கம்.. ஆபிஸில் நுழைந்ததும் ஈமெயில், பின் தொலைபேசி விவாதங்கள்.. காப்பி.. அரட்டை.. வேலை.. மதிய உணவு.. அரட்டை.. நியூஸ் பேப்பர் வாசிப்பது.. வேலை.. காப்பி.. வேலை.. அரட்டை.. பின் ஏழு மணி வேனைப் பிடித்து வீடு நோக்கிப் பயணம்.. வீடு வந்ததும் சாப்பாடு.. கொஞ்சம் டி.வி.. கம்ப்யூட்டர்.. அப்புறம் தூக்கம். சுபம்.

இதில் ஒன்று மாறினாலும் தலைவலி சர்வ நிச்சயம்.

வேனைத் தவறவிட்டுவிட்டு பைக்கில் 29 கிலோமீட்டர் பயணம் செய்து வியர்த்து ஒழுகி களைத்துப்போய் ஆபிஸில் அமர்ந்து.. அங்கே ஏதாவது களேபரம் ஏற்கனவே அரங்கேறி இருந்தால்... ஆரம்பம்.. தலைவலி.

இந்தத் தலைவலி என்பது அமைதியற்ற (restlessness) காரணத்தால் ஏற்படுகிறது. நிஜம்மாகவே தலைவலிக்கிறதா என்றால், இல்லை. ஆனால், மூளை யோசிக்க மறுக்கிறது.. களைப்புக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்வதா.. போன் பேசுவதா.. ஈமெயில் படிப்பதா.. இப்படியெல்லாம் யோசிக்கக்கூட அவகாசம் இல்லாத நிலையில் தலையை சிலுப்பிவிட்டு இரண்டு கையாலும் பிடித்துக்கொண்டு ஒன்றையும் யோசிக்காமல் உட்கார்ந்துகொள்ள வைக்கும்.. இந்தத் தலைவலி.

வீட்டிலும் சில சமயம் இப்படி நடப்பதுண்டு. இது எனக்கு நிகழ்வது போக, பல பேருக்கு நடக்கப் பார்த்ததுண்டு. இதில் விந்தையான விஷயம், இந்தத் தலைவலியின் தொற்றுதல்தான்.

நீங்கள் இந்தத் தலைவலியால் அவதிப்படுவதால், செய்ய மறக்கும், மறுக்கும் விஷயங்கள், சொதப்பும் விஷயங்கள் அடுத்தவரைப் பாதிக்கிறது. மேலும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை ignore செய்வதாலோ, எரிந்து விழுவதாலோ, கோபம் கொள்வதாலோ... வார்த்தைகளை தேவையின்றிக் கொட்டுவதாலோ... அடுத்தவர்களுக்கும் இந்தத் தலைவலி தொற்றிக்கொள்கிறது. It proliferates, further down. வைரஸ் மாதிரி பரவுகிறது..

உற்றுப்பார்த்தால், உங்களுடைய தலைவலி பலபேரின் வாழ்க்கைப் பாதைகளை மாற்றியிருக்கும். முக்கியமாக, ஏதாவது ஒரு அமைப்பின் வட்டத்தின் மத்தியில் நீங்கள் உட்கார்ந்திருந்தால் உங்கள் தலைவலியின் வெளிப்பாடு அதிர்வலை போலப் பரவுகிறது.

பல குடும்பச்சண்டைகளிலும் இந்தப் "பரஸ்பர தலைவலி பறிமாற்றம்"தான் முக்கிய காரணமாக அமைகிறது.

இதைப் போக்க என்ன வழி ?

டென்ஷனாக இருக்கும் போது ஒன்றிலிருந்து பத்துவரை தலைகீழாக எண்ணினாலும் ஒரு புண்ணியமும் இல்லை. இதையெல்லாம் மாற்ற முயல்வதும் வீண்.. நம் சுய இயல்பை மாற்ற முயலும் நமது அத்தனை முயற்சிகளையும் பைத்தியக்காரத்தனம் என்பதே என் கருத்து.

ஐந்து வருடங்கள் கழித்து மல்லாக்காகப்படுத்து விட்டத்தில் காற்றாடி சுற்றுவதைப் பார்த்தபடியே பழைய நினைவுகளை அசைபோடும்போது இந்த தலைவலி ரியாக்ஷன்கள் நம் முகத்தில் சிரிப்பை வரவழைக்கப் பயன்படும்.

Thursday, January 29, 2009

And the little one has grown !



போட்டோ எப்படி ?

Saturday, January 24, 2009

ஏகாம்பரம் - ஒரே மாமரம்

Gopuram - Ekambareshwarar

காஞ்சிபுரம் சென்றிருந்தேன், திரும்பவும். இந்த முறை ஏகாம்பரேஸ்வரரை தரிசிக்க.

கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வீர்களேயானால், போக வர ரூ.46 கோயிலில் போட்டோ எடுக்க ரூ. 25 அங்கங்கு தட்சணை ரூ. 20 - ஆக மொத்தம் ரூ. 91 மட்டும்தான் செலவு ஆகும். போக ஒன்றரை மணி நேரம், வர ஒன்றரை - ஆக மூன்று மணி நேரப்பயணம். கோயிலில் ஒரு இரண்டு மணி நேரம்.

சுமாராக ஒரு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் இருந்தால், வெகு சுலுவாக போய் வரலாம். (சொகுசு ஏசி பஸ் ஒன்று தி. நகரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு செல்கிறது. அதில் செல்வதானால், இன்னும் இரண்டு சலவை நோட்டுகள் எடுத்துக்கொள்ளவும்).

Outlook- Ekambareshwarar

இந்த ஸ்தலத்தின் வ்ருக்ஷம் மாமரம். இதன் அடியில் காமாக்ஷி அம்மன் தவம் செய்து ஈசனை மணந்தார். அந்த மாமரத்தின் வயது 3500 என போர்டில் எழுதியிருந்தது. அம்மரத்தில் நான்கு கிளைகளில் நான்கு விதமான ருசியும் உருவமும் உள்ள மாங்கனிகளை அம்மரம் தருவதாகவும் எழுதியிருக்கின்றனர்.

ஒரே மாமரம்... ஏக + ஆமரம் = 'ஏகாம்பரம்' என்ற மரூஉ படி மருவப்பட்டது. (இடக்கரடக்கல் எல்லாம் மறந்து போச்சு).


Prakaram - Ekambareshwar

கீழே இருக்கும் இந்தப்படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. 'மனோகர்' என்பவர் சொல்லிக்கொடுத்தொரு விஷயம் 'ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கட்டமைப்பை போட்டோ எடுக்கும்போது, அதில் உயிரோட்டம் ஏதாவது இருக்கவேண்டும்' என்பது. அதன்படி, முடிந்த அளவிற்கு மக்கள் நடமாட்டத்தோடு எடுக்க முயற்சித்திருந்தேன்.

Prakaram 2 - Ekambareshwar

அப்புறம் நம்ம ஃபேவரிட் தெப்பகுளம்..

Theppakulam - Ekambareshwara

Reflections

அப்புறம் சூரிய அஸ்தமனம்..

Sunset - Ekambareshwarar

Sunset 2 - Ekambareshwarar

இந்த போட்டோவில் கொஞ்சம் தகிடுதத்த வேலை செய்திருக்கிறேன்.

Theppakulam - Ekambareshwarar

கறுப்பு வெள்ளையில், முகப்பு கோபுரம்

Monochrome - Ekambareshwarar

வாசலில் விற்கப்பட்ட பாசி மணி, ஊசி மணி மற்றும் வளையல்கள்..

Jewels - Ekambareshwarar

Friday, January 23, 2009

ஓமா ? பாமா ? ஒபாமா !

ஒபாமாவின் பதவியேற்பு விழாவிற்கு கூடியிருந்த கூட்டம்... சாட்டிலைட் படம்.

Thursday, January 22, 2009

Sure Shot



இந்த வருடம் ஆஸ்கார்களை அள்ளப்போகும் படம்.. இந்த வயதான இளைஞர் யார் தெரிகிறதா ?

என் ஊகத்தில், இந்தப் படம் - "The Curious Case of Benjamin Button" அள்ளப்போகும் அவார்டுகள்

1. சிறந்த ஒப்பனை
2. சிறந்த நடிகர் - பிராட் பிட்
3. சிறந்த படம்
4. சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை

பரபரப்பாகப் பேசப்படும் "Slumdog Millionaire" (ஹிந்தியில் Slumdog Crorepathi... தமிழில் வந்தால் எப்படி வைப்பார்கள் - 'குப்பநாய் கோடீஸ்வரன்' என்றா ?) பல அவார்டுகளுக்கு நாமினேட் ஆகியுள்ளது.

அவற்றில் இசைக்கு நம்ம ஆள் போட்டியிடுகிறார். ஜெயித்தால், மீசையை வளர்த்து முறுக்கிக்கொள்ளலாம்.

Slumdog Millionaire சிறந்த ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் வாங்கினால் வாங்கலாம். ஆனால் 'The Dark Knight' ஒளிப்பதிவில் தட்டிச்செல்லும் என்பதும் என் ஊகம். Slumdog Millionaire "சிறந்த படம்" பிரிவில் நாமினேட் ஆனதே கொஞ்சம் ஓவர்.

அனிமேஷன் கேட்டகரியில் 'WALL-E'யும் 'Kung-fu Panda'வும் இருக்கிறது. என் ஆசை குங்க்ஃபு பாண்டா ஜெயிக்க வேண்டும் என்பதுதான்.

"MILK" இன்னும் பார்க்கவில்லை.. அதே போல் "Frost / Nixon"ம் பார்க்கவில்லை.

"In Bruges" படம் எல்லாம் இங்கே வெளிவரவே இல்லை (பர்மா பஜாரைத் தவிர). இந்தப்படம் பல துறைகளில் நாமினேட் ஆகும் என்று நான் எதிர்பார்த்தேன்.

குறைந்தபட்ச சந்தோஷம், இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களில் பெரும்பாலானவையை ஏற்கனவே பார்த்து அதை ஒரு 'சினிமா ரசிகனாக' ஜட்ஜ் செய்ய முடிந்தது.

Full Nomination List here

Tuesday, January 20, 2009

பிட்ஸ்... !



நேற்று பாராக் ஒபாமா பதவியேற்றுக்கொண்ட நிகழ்ச்சியை சி.என்.என்.னில் பார்த்துக்கொண்டிருந்தோம்... குடும்பமாக ! பதவிப்ரமாணத்திற்கு முன்னால் ஒருவர் வந்து ப்ரார்த்தனை செய்தார். அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் மௌனமாக இருந்து அந்தப் ப்ரார்த்தனையைக் கேட்டார்கள். Pin-drop silence. பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.. அது நடந்துகொண்டிருக்கும்போதே அப்பாவைப் பார்த்து நான் சொன்னேன்..

"அங்கே பார்.. எவ்ளோ அமைதியா கேக்கறாங்க.. என்ன ஒரு டிசிப்ளின்... நம்ம ஊர்ல இப்படி நடக்குமா... மேடைல ஒருத்தன் பேசிட்டு இருப்பான்... இங்கே ஒருத்தன் திரும்பி கதை அளந்திட்டு இருப்பான்..."...

அதற்கு என் அப்பாவும் "ஆமாம்.. அமெரிக்கான்னா அமெரிக்காதான். இங்கே பீச்லெ நடக்கிற கூட்டத்தில எல்லாம் ஒரே இரைச்சலாத்தான் இருக்கும்" என்றார்.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா வந்தாள். டி.வியைக் காட்டி "அது அமெரிக்கா.." என்றும், எங்களைக் காட்டி "இது இந்தியா.." என்றும் சொன்னார்.

:)

---------------------------------------

'ஸ்லம்டாக் மில்லினர்' பாடல்கள் அனைத்தும் திரும்பத்திரும்ப லூப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. "ரிங்க ரிங்க ரிங்கா !!"

---------------------------------------

'மூப்பும் பிணியும் இனி பொழுதுபோக்காம் - வாழும்
நாளில் தனிமை மட்டுமே உறுதுணையாம் - தினமும்
கோயில் மணியும் கரண்டு பில்லும் பணியாம்.. இனிமேல்
உறுதி கனியும்.இரக்கம் வழியும். பயம் கூடும் - கூடிய
சீக்கிரம் முடியும்.'

போன பதிவில் நான் எழுதிய கவிதை. எந்த மரபுக்கும் ஒட்டாத புதுக்கவிதைதான்.. ஆனால் முறையாக மரபுக்கவிதைகள் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

Saturday, January 17, 2009

போஸ்ட் ரிட்டையர்மென்ட்


நிர்மலா ஆபிஸிலிருந்து திரும்ப வரும்போது டி.வி. உச்சஸ்தாயியில் அலறிக்கொண்டிருந்தது. அப்பா முன்னதாகவே வந்திருக்கிறார் போலும். செருப்பை கழட்டிவிட்டு கூடத்துக்குள் நுழைந்தாள். சோபா திண்டில் சாய்ந்துகொண்டு தூங்கிக்கொண்டிருந்தார் வரதன். ஓருவேளை இன்று ஆபிஸ் போகவில்லையோ... ஓஹோ.. மறந்தே போய்விட்டது.

நேற்றோடு வரதன் ரிட்டையர் ஆகிவிட்டார். வாலன்டரி ரிட்டையர்மென்ட். முப்பதிமூன்று வருடமாய் போய் வந்த அலுவலகம், ஒரே நாளில் அன்னியமானது. வரதனுக்கு இரண்டு வருடங்களாகவே அலுவல் செல்வது அலுத்துப்போய் விட்டது. நெடு நாள் நண்பர்கள் எல்லாரும் விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு, அமெரிக்கா பையனுடன் போய் தங்கிவிட்டனர். மேனேஜரிலிந்து பியூன் வரை எல்லாம் இளம்ரத்தம்.. அவருக்கு என்று வேலையே இல்லாமல் போய்விட்டது. அலுவலகத்தில் தன் கடைசி நாட்களில் வரதன் அதிகமாக பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் குறித்துத் தர மட்டுமே பயன்பட்டார். அல்லது ஜாதகப் பரிவர்தனை.. சென்ற வருடம் வரை இன்கம் டாக்ஸ் அறிவுரையாவது வழங்கிவந்தார். இப்பொழுது அக்கவுண்டன்ட் முரளியிடம் நூறு ரூபாய் கொடுத்தால் மொத்தமாக ஃபைல் செய்தே கொடுத்துவிடுகிறான்.

எப்பொழுது முடிவு செய்தார் என்று அவருக்கே தெரியாது.. சென்ற வாரம் ஒரு நாள் இரவு.. டைனிங் டேபிளில் நிர்மலாவும் அவரும் உணவருந்திக்கொண்டிருந்தபோது, "நாளக்கு வி.ஆர்.எஸ் எழுதிக் கொடுக்கலாம்னு இருக்கேன்.. " என்றார். நிர்மலா நிமிர்ந்து அவரை உண்ணிப்பாகப் பார்த்தாள்.

"நல்லா யோசிச்சிட்டியா ?"..

"ம்ம்ம்.. "

இரண்டு நிமிடங்கள் மௌனம் நிலவியது. யார் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்று ஒத்திகை பார்ப்பதுபோல இருவருக்கும் தோன்றியது.

"சரி. கோ அஹெட்.." என்று சொல்லிவிட்டு கை கழுவிவிட்டாள் நிர்மலா.

அப்புறம் ஒரு வாரம், அதைப் பற்றியே மறந்தாகிவிட்டது. இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. ஹால் மேஜையில் ஒரு வாட்ச் டப்பா, ரிட்டையர்மென்டுக்கு அடையாளமாக இருந்தது. முப்பத்து மூன்று வருடங்களின் ஞாபகப் பெட்டகம் அந்த வாட்ச்.

தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பாமல் டி.வியை அணைத்துவிட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.. பின்னர், கொஞ்ச நேரம் சமையலறையில் சமைத்தாள். இன்னும் சோபாவிலேயே அயர்ந்திருந்தார், வரதன். டைனிங் டேபிளில் தட்டு போட்டுவிட்டு கூடத்திற்குள் வந்தாள். தோளைப்பிடித்து கொஞ்சம் மெதுவாக உலுக்கினாள்.

"சாப்பிட வாப்பா.. " என்றாள்.

வரதன் சுய நினைவுக்கு வர நேரமானது. டி.வி அணைக்கப்பட்டிருக்கிறது. பூட்டிய வீட்டுக்குள் மகள்.. அவளிடமும் ஒரு சாவி இருக்கிறது. அவள் ஆபீஸிலிருந்து வந்து சமைத்து முடித்தாகிவிட்டது. மணி எட்டு. ஆறு மணி நேரம் தூங்கியிருக்கிறார். இப்படி தனது சுற்றுப்புரங்களை கணக்கிட்டபடியே எழுந்துவந்து டைனிங் டேபிள் முன் அமர்ந்தார்.

"மத்தியானம் எங்கே சாப்பிட்டே ?" என்றாள்.

அவளைப் பார்க்காமல் உதட்டைப் பிதுக்கினார். சாப்பிடவில்லை போலும். நிர்மலாவுக்கு லேசான ஒரு குற்ற உணர்வு தோன்றி, தோன்றிய வேகத்தில் மறைந்தது. சாதாரனமாக இருவரும் தனக்குத் தானே பறிமாறிக்கொள்வது வழக்கம். இன்று, அகால வேளையில் தூங்கி எழுந்ததினால் வரதன் சாப்பிடும் மன நிலையில் இல்லை.

"மத்தியானமும் சாப்பிடலே.. இப்பொ சாப்பிடு.. நான் வேன்னா போடட்டுமா ?" என்றாள் நிர்மலா. எதற்கும் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தார். ஒரு விதமான சூனியம் அவரை ஆட்கொண்டிருந்ததைப் போல காட்சியளித்தார். கண்களில் வெறுமை.

"எனக்கு இன்னும் தூக்கம் வர்ரது.. நான் தூங்கறேன்.." என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே டைனிங் டேபிளில் தட்டை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தார்.

"சரிப்பா.. போய் படுத்துக்கோ.. டப்பர்வேர்ல போட்டு வைக்கறேன். ராத்திரி பசிச்சா மைக்ரோவேவ்ல வைச்சு சுடபண்ணி சாப்பிடு.. ".

நிர்மலா ஆச்சரியத்துடன் யோசித்துக்கொண்டிருந்தாள். கடந்த நான்கு வருடங்களில், இருவருக்குமான உரையாடலில் இன்றுதான் மூன்று வாக்கியங்களுக்கு மேல் பறிமாறப்பட்டிருக்கின்றன.

தூக்கக் கலக்கத்தில் தள்ளாடி நடந்து சென்ற வரதனைப் பார்க்கையில், படிப்படியாக இல்லாமல் திடீரென்று ஒரு க்ஷண வினாடியில் அவரை முதுமை தொற்றிக்கொண்டுவிட்டதாக எண்ணினாள் நிர்மலா. இன்றிலிருந்து அவரது ரிட்டையர்மெண்டினால், தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும் என்று தோன்றியது. சிந்திக்க விருப்பமில்லாமல், கடகடவென பத்துப்பாத்திரங்களைத் தேய்த்துவிட்டு படுக்கப் போனாள். தூங்கிவிட்டாள்.

--------------

'மூப்பும் பிணியும் இனி பொழுதுபோக்காம் - வாழும்
நாளில் தனிமை மட்டுமே உறுதுணையாம் - தினமும்
கோயில் மணியும் கரண்டு பில்லும் பணியாம்.. இனிமேல்
உறுதி கனியும்.இரக்கம் வழியும். பயம் கூடும் - கூடிய
சீக்கிரம் முடியும்.'

--------------

வரதன் அதிகாலையில் விழித்தெழுந்து காப்பி போட்டு நிர்மலாவுக்கும் கலந்து கொண்டுவந்து கொடுத்தார். நிர்மலா நன்றி சொல்லலாமா என்று யோசித்தாள். பின் புன்னகைத்தாள். கண்ணாடிக்குள் இருந்து அவர் கண்கள் அந்தப் புன்னகையை படமெடுத்தன. இருவரில் யாரோ ஒருவர் தோற்றுவிட்டதால், அவர்களது யதேச்சையான இயல்புகளில் மாற்றங்கள் தென்பட்டன.

சப்போர்டிவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள் நிர்மலா. ஆனால், என்றும் இல்லாமல் இன்று திடீரென்று கரிசனத்தில் ஓவர் டூ செய்யக்கூடாது என்பது அவள் எண்ணம்.

"சோ.. ! என்ன ப்ரோக்ராம் ?" என்று பொத்தாம்பொதுவாக கேட்டாள் நிர்மலா. அவரது எதிர்காலத்தைப் பற்றி கேள்வி கேட்கவே பயமாக இருந்தது அவளுக்கு. அவரது எதிர்காலம் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் காரணத்தினால்கூட அப்படி இருக்கும்.

வரதன் வெறுமன தோள்களைக் குலுக்கி கண்களை மூடிக்கொண்டார். அவருக்கு ஒன்றும் அந்த நொடியில் தோன்றவில்லை. முப்பத்துமூன்று வருடங்கள் அலுப்பு சலிப்பில்லாமல் வேலைசெய்தும், "அதற்குப் பிறகு" என்ற எதிர்கால நிலையை யோசிக்காமல் போனதும், அந்த நிலை இவ்வளவு சீக்கிரமாக வந்ததும் அவருக்கு விந்தையாக இருந்தது. ஹி வாஸ் காட் பை சர்ப்ரைஸ்.

"போஸ்ட் ஆபீஸ் போய் ஒரு பாலிஸி எடுக்கப்போறேன்.. ஐ திங்க் இன்னிக்கு ஃபுல்லா அதுலே ஓடிடும்.." என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்வதுபோல சொன்னார்.

"ஓகே.."

ரிட்டையர்மென்ட் பணம் எவ்வளவு வந்தது என்று அவர் சொல்லவுமில்லை. அவள் கேட்கவும் இல்லை. டிபன்பாக்ஸ் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

"போயிட்டுவரேன்.." என்று சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் சென்றாள்.

வரதன் சோபாவில் உட்கார்ந்தார். ரிட்டையர்மென்டுக்குப் பின் இருக்கும் காலம் முழுவதும், ரிட்டையர்மென்டுக்கு முன் வாழ்ந்த காலத்தை மெள்ள அசை போடுவதற்காகத்தான் என்று உரைத்தது. அது ஒரு சுய பரிசோதனை முயற்சி. Afterall, One's past is what one is...

நிர்மலா... தகப்பன் பெண் மாதிரி அவர்கள் இருவரும் நடந்துகொள்ளாமல் இருக்க ஆரம்பித்த நாள் நினைவுக்கு வந்தது. அந்த நாட்களின் வாசனைகூட அவருக்கு ஞாபகம் வந்தது.

--------------

"என்ன லஞ்ச் இன்னைக்கு ?" என்றபடி நிர்மலா உட்கார்ந்திருந்த டேபிளுக்கு வந்தான் குணசேகர் என்கிற குணா.

"ஹாய்.. குணா.. கம் கம்.. வெந்தய குழம்பு இன்னிக்கு. யுவர் ஃபேவரைட்.."

ஃபெண்டாபுலஸ்.. லெட் மீ ஹாவ் சம் !". உரிமையுடன் அவள் டிபன் பாக்ஸை அகப்படுத்திக்கொண்டான்.

"சோ ! வாட்ஸ் அப் ?"... சம்பிரதாயமாக கேள்வி கேட்டான்.

"யூ நோ வாட் ?! எங்கப்பா ரிட்டையர் ஆயாச்சு.. " அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் தண்ணீர் குடித்தாள்.

"ஓ.. குட்.. !" என்றவன், சிறிது மௌனத்திற்குப் பிறகு கூர்மையாக அவளைப் பார்த்து, "or, is it ?" என்றான்.

"தெரியலை.. இப்பொதிக்கு.. இல்லேன்னா மே பீ !...கொஞ்சம் டையம் ஆகும்.. செட்டில் ஆக."

"ஹ்ம்ம்..".

"குழம்பு பிரமாதம். யூ ஆர் அ கிஃப்டட் குக்."

மெல்லிதாக சோகம் இழையோட புன்னகைத்தாள்.

"லுக், உன் குழப்பம் எனக்குப் புரியுது.. பட், இது நானோ நீயோ இல்ல உங்க அப்பாவோ ரிசால்வ் செய்ய முடியாது.. நீ சொன்ன மாதிரி, டையம் வரனும்". அவன் சொன்னது வெகுசாதாரனமான மூனாவது மனித ஆறுதல் என்று அவனுக்கும் உரைத்தது.. ஆனால் வேறு பொருத்தமான ரியாக்ஷன் அவனுக்குத் தோன்றவில்லை.

"ஐ அன்டர்ஸ்டாண்ட்.. ஆனால், நான் கவலைப்படறதே வேற.. நான் அப்பா வீட்டுக்குத் திரும்ப வந்து கிட்டத்தட்ட நாலு வருஷம் ஆகப்போறது. இந்த நாலு வருஷம், அவரும் நானும் பேசினதே சொற்பம். ஹீ ஹாஸ் நோ ரிகார்ட் ஃபார் மீ.. அண்ட் சோ வாஸ் ஐ !".

"ஐ நோ.. இதெல்லாம் மாறப்போறதுன்னு நினைக்கிறியா ?"

"மே பி.. இன்னிக்கு கார்த்தாலே திடீர்னு காப்பி போட்டுக் கொடுத்தார். எனக்கு தாங்க்ஸ் சொல்லனும்னு வாய் வரைக்கும் வந்திடுத்து.. ஆனா, ஆர்டிஃபிஷியலா இருக்கும்னு சொல்லலை.."

குணா சிரித்தான்.

"ஏன் சிரிக்கறே ?"

"இல்லே.. நீ சொல்லாம இருந்ததுதான் ஆர்டிஃபிஷியல். உனக்கு சொல்லனும்னு தோனினதுதான் நாச்சுரல் ஃபீலிங்... ஏன் பயந்துசாகறே ? உங்கப்பாகிட்டே தோக்க உனக்கு பயமா ?"

"இதில தோல்வின்னு ஒண்ணும் இல்ல.. எனக்கு வைராக்கியம் எதுவும் இல்லப்பா.. என்னோட பேசக்கூடாதுன்னு முடிவெடுத்தது அவர். அதுக்கு மரியாதை கொடுத்து நானும் இருக்கேன். தட்ஸ் ஆல். இன்ஃபாக்ட் அதுதான் கம்ஃபோர்டபிள், ரெண்டு பேருக்கும்."

"ஹ்ம்ம்.."

"வாட் டூ யூ திங்க்.. நான் தனியாப் போலாமான்னு கூட யோசிச்சிட்டு இருக்கேன்."

"வாட் ? ஆர் யூ க்ரேஸி... தப்பா நினைச்சுக்காதே.. சரியான லூஸு குடும்பம் உன்னோடது."

"கான்ட் அக்ரீ மோர்" என்று சிரித்தாள், நிர்மலா.

"ஹ்ம். பின்ன.. உங்கப்பா சொந்த பொண்ணோட பேசறதில்லை.. பொண்ணும் அப்பாகிட்ட பேசறதில்ல.. ஆனா ஒரே வீட்டுல இருக்கீங்க.. அது என்ன மாதிரி லைஃப் ? ரேதர் என்ன ரிலேஷன்ஷிப் ? ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கிறீங்க.. அவ்ளோதான்"

"முதல் சில நாட்கள் நானும் அப்படித்தான் நினைச்சேன். நான் வீட்டை விட்டு போய் வினோத்தை கல்யாணம் செஞ்சுக்கிட்டது அவருக்கு முதல் ஷாக்.. அப்புறம் ஆறு மாசம் கழிச்சு டைவோர்ஸ் அப்ளை செஞ்சிட்டு திரும்பவந்தது இன்னொரு ஷாக். கூடவே டிஸ்ஸப்பாயின்ட்மென்ட், கவலை, விரக்தி, அனுதாபம் எல்லாம். இன்ஃபாக்ட் வீ போத் ஷேர்ட் தி சேம் ஃபீலிங். எல்லாத்தையும் தாண்டி அவருக்கு தன்னை மீறி நடந்துண்டேன்கிறதுல அவருக்கு கோபம் மட்டும் ஜாஸ்தியா இருந்துது.. அதனால பேசலை.. பாக்கி கரிசனங்களினால வெளில போகச் சொல்ல முடியலை.. அது எனக்கும் கம்ஃபர்டபிளா இருந்துது. சோ, ஐ பிகேன் லிவிங் வித் இட். சோ ஃபார், சோ குட்".

"இப்பொ என்ன ஆச்சு அந்த கம்ஃபர்டுக்கு.."

"தெரியலை.. என்ன ஆகும்னு. ஆனால்...".. யோசனைகளுக்கும் வார்த்தைகளுக்கும் பாலம் போட முடியாமல் தவித்தாள்.

"வெல்... ! ரொம்ப யோசிக்காதே.. சில விஷயங்களை யோசிக்காமலே விட்டுடனும்.. life sucks if you are prepared for it"

உண்மைதான். எல்லாவற்றிர்க்கும் ப்ளான் போட்டால் எதிர்கொள்வதில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கிறது.

"நீ சொல்றதும் சரிதான்.."

"எஸ்.. இப்பொ பார், உன் வெந்தயக் குழம்பு காலி.. இப்பொ உன் மத்யான சாப்படு லேது. சாப்பாட்டுக்கு திண்டாடப்போறியே, அதுதான் த்ரில்.. இல்லையா ?" என்றான் சிரித்தபடியே.
-----------------------

சாயங்காலம்.

டி.வி ஓடவில்லை. டைரியில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் வரதன். அவ்வப்போது கவிதை எழுதுவார்.

"அப்பா பேசலாமா ?".. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள். அவளை அதிர்ச்சியாகப் பார்த்தார்.

அவர் எதிரில் ஒரு மோடா ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு, காஃபி மக்கை இரண்டு கைகளிலும் பற்றிக்கொண்டு அவரின் பதிலை எதிர்பார்ப்பதாக புருவத்தை நெருக்கினாள். வரதன் பதில் சொல்லவில்லை.

"தோ பார். எப்படியும் பேசித்தான் ஆகனும். எனக்கு ரெண்டு கேள்வி இருக்கு. ஒன்னு உன்னைப்பத்தினது.. இன்னொன்னு என்னைப் பத்தினது. உன்னைப்பத்தி சொல்லனும்கிறது அவசியம் இல்லை.. ஆனா சொல்லனும்னு தோனித்துன்னா சொல்லலாம்.. ஆனா, நான் முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டியது என்னைப் பத்தி.."

டைரியை மூடி வைத்தார். பேனாவை பாக்கெட்டுக்குள் கவனமாக செருகிக்கொண்டார்.

"எனக்கும் காப்பி கொடு" என்றார். சமயலுள் சென்று காப்பி கலந்து கொண்டுவந்து கொடுத்தாள்.

"ம்ம்.. சொல்லு.. என்ன தெரிஞ்சுக்கனும்".

"இப்பொ நீ ரிட்டையர் ஆயாச்சு. வாட் ஹாப்பன்ஸ் நௌ ?". இன்னும் ஓப்பன் க்வெஸ்டின்ஸ்களே கேட்டுக்கொண்டிருந்தாள், நிர்மலா.

"புரியலை.."

"நீ மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு இருக்கே !".

"ஹெ !" சிரித்தார் வரதன். "நீ காலேஜ் முடிச்சப்புறம் நான் கேட்ட கேள்வி. இப்பொ நீ கேக்கற....".

"இதுதான் டெலிகேட்டா இருக்கு. நான் உன்னை இன்டிமிடேட் செய்யலை. உண்மையா தெரிஞ்சுக்கனும். முக்கியமா எனக்கு என்ன ப்ளான் வெச்சிருக்கேன்னு தெரிஞ்சுக்கனும்"

"இன்னும் புரியலை".

காப்பியை முழுதாக குடித்து முடித்து, கோபத்துடன் ஓங்கி வைத்தாள்.

"போஸ்ட் ரிட்டையர்மென்ட், நீ இங்கேயே, இந்த வீட்டிலேயே இருக்கப்போறியா ? இல்லே தஞ்சாவூர் வீட்டுக்கு போகப்போறியா ? நீ இங்கேதான் இருக்கப்போறேன்னா, நான் இங்கே இருக்கறிதிலே உனக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கா.. தஞ்சாவூர் வீட்டுக்குப் போறேன்னா நான் இங்கே இந்த வீட்டைப் பாத்துக்கலாமா"

அவள் கேட்டது அத்தனையுமே விந்தையாக இருந்தது வரதனுக்கு.

"என் உயில் பத்திரத்தை கேட்கிற மாதிரின்னா இருக்கு. I hope im not dead already"

நிர்மலாவிற்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. இன்று பேசியிருக்கவே கூடாது. முகத்தை திருப்பிக்கொண்டாள்.

கோபப்படாதே.. உன் கேள்வியோட நோக்கம் எனக்குப் புரியலை.. தட்ஸ் ஆல்".

நிர்மலா பேசவில்லை. மௌனம். நான்கு வருடங்கள் நிலவிய இந்த மௌனம், இப்பொழுது ஒரு சண்டை வந்ததும் அசௌகர்யமாக இருந்தது. யாரேனும் ஒருவர் அதை உடைத்தால் தேவலை என்று மற்றொருவர் எண்ணிக்கொண்டிருந்தனர்.

"இப்பொ என்ன தெரிஞ்சுக்கனும் ஒனக்கு. பணத்தை பேங்கிலே போட்டுட்டேன். மாசா மாசம் ஏழாயிரத்து ஐனூறு வரும். எல்லா கடனையும் அடைச்சாச்சு. ஏழாயிரத்தில என் செலவுகளை சமாளிச்சுக்கலாம். இதுதான் என் ஃபைனான்ஷியல் ப்ளான். மத்தபடி, எப்படி பொழுதை ஓட்டறதுன்னு இன்னும் முடிவு பன்னலே. நீ இங்க இருக்கறதுலே எனக்கு எந்தப் ப்ரச்சனையும் இல்லை.. ஆனால் என்ன விநோதமா இருக்குன்னா... முதல் தடவையா எனக்கு ஆட்சேபனை இருக்கான்னு நீ கேட்டதுதான்" என்று சொல்லி நிறுத்தினார்.

நிர்மலாவிற்கு அவர் ஏளனம் புரியாமல் இல்லை. ஆனால், வினோதுடன் கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்கிறாரா.. அல்லது திரும்ப வந்து வீட்டில் இருப்பதைச் சொல்கிறாரா ? நியாயமாக இரண்டு சமயங்களிலும் அவரது ஒப்புதல் இல்லாமல்தான் அவள் செயல்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.

"ஐ டோன்ட் ஃபீல் சாரி ஃபார் நெய்தர்" என்று நினைத்துக்கொண்டாள். "இப்பொ பழசை குத்திக்காமிக்க வேண்டாம்" என்றாள்.

"தெரியுமே.. உனக்கு தோல்வி பிடிக்காது. ஆனால், வினோத் விஷயத்தில நீ தோத்துப்போனது உன்னால மறுக்க முடியாது. நான்கு வருடங்களுக்கு முன்னால் நடக்கவேண்டிய சண்டை இப்பொழுது ஆரம்பித்திருப்பதாகத் தோன்றியது.

"சே !! நாலு வருஷமா அந்த மௌனம் சந்தோஷமா இருந்திச்சு.. இப்பொ பேச ஆரம்பிச்சா, பழசை எல்லாம் கிண்டி, தேக்கி வெச்சிருந்த கோபத்தையெல்லாம் என்மேல கொட்டறியா ? so much for residual anger".

"Residual anger எல்லாம் இல்லை. தினம் தினம் உன்னைப் பார்க்கறச்சே வரும். Fresh ones. என் கனவுகள் எல்லாத்தையும் குமிச்சு வெச்சு ஓங்கி காலாலே ஒதச்ச மாதிரி... ஒரே நாளிலே,..."

"ஜஸ்ட் ஸ்டாப் இட். எல்லாம் முடிஞ்சு மூட்டை கட்டிப் போட்டாச்சு."

"லுக்.. இப்பொ உனக்கு உன் ஆன்ஸர் கிடைச்சாச்சு. ஸ்டே பேக், இஃப் யூ லைக் டு".

"நீங்க என்ன பன்னப்போறேள் ?"

"தட்ஸ் லீஸ்ட் ஆஃப் யுவர் பாதரேஷன்".

"குட்."

கையில் கிடைத்த தலையணையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனாள் நிர்மலா.

வரதன் யோசித்தார். நிர்மலா கூறியதுபோல் பழைய கோபக்குட்டையில் இன்னும் ஏன் மூழ்கிக்கிடக்கிறோம். தன் கோபம் எந்த விதத்திலும் அநியாயம் இல்லை. பணத்தை கொட்டி படிப்பு கொடுத்து, புத்திசாலியாக உருவாக்கி, கனவுகளைத் தேக்கி வைத்திருந்தால்.. அதையெல்லாம் நிர்மூலமாக ஆக்கியது அவள் தவறு என்றால், அவளைக் கோபிப்பது அனிச்சைதானே. அது எத்தனை வருடங்கள் ஆனால் என்ன. தந்தை என்ற ஸ்தானத்தில் ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் வார்த்தையை மீறிய ஏமாற்றம்... அந்த நிலையை எதிர்கொள்ள முடியாமல் போன அவரது இயலாமை.. தன் அனுமதி இல்லாமல் தனக்கும் தன் மகளுக்கும் இடையில் புகுந்துவிட்ட இன்னொருவன் மேல் ஏற்பட்ட எரிச்சல்..முக்கியமாக இது அத்தனையும் அவள் உணர்ந்திருந்தாள் என்பதுதான் அத்தனை உணர்ச்சிகளையும் அவரை உள்ளடக்க வைத்தது.

வெளிப்படுத்தாத கோபம் வெறுப்பானது. வெறுப்பு வெறுமையானது. ஆறு மாதம் கழித்து அவள் திரும்ப வந்தபோதும் அதே கதைதான். பாவம். அவள் என்ன செய்வாள். அவள் புத்திசாலித்தனத்துக்கும் முற்போக்குக்கும் யாராலும் அடிபணிந்து இருக்கமுடியாது.. அதிகபட்சம் ஈடுகொடுக்க முடியாது..

இப்பொழுது கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறாள். தன்னுடைய ஆட்சேபத்தையெல்லாம் கேட்கிறாளே.. ஒரு வகையில் அவள் இளகிப்போனது அவருக்கு வருத்தமாக இருந்தது. தனியாக உலகை எதிர்கொள்பவளுக்கு தைரியம் முக்கியம். வரதன் அவளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முயலவில்லை. எல்லாம் தெரிந்தவளுக்கு தனக்கு என்ன செய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிந்திருக்கும். மறுபடி ஒரு ஏமாற்றத்திற்கு அவர் தயாராக இல்லை.

"வாட் ஹாப்பன்ஸ் நௌ ?" என்றாளே... என்ன அர்த்தத்தில் கேட்டாள். தன்னுடைய இயலாமையை நோக்கித்தானே கேட்டாள். இனிமேல் என்னடா பன்னப்போறே ? வேலை வெட்டி இல்லை.. சுடிதார் இஸ்திரி போட்டு, டிபன்பாக்ஸ் அலம்பி, மழை நாட்களில் பஸ் ஸ்டாண்டுக்கு குடை எடுத்துக்கொண்டு ஓடவேண்டும்.. இப்படி எல்லாம் எதிர்பார்க்கிறாளா ?

சே சே ! அப்படி எல்லாம் நினைக்க மாட்டாள். ஆனால், இவற்றையெல்லாம் அவர் செய்த காலத்தை நினைத்துப்பார்த்தார். காலம் குரூரமானது. ஒரே சம்பவத்தை ஒரு சமயத்தில் சுகமானதாகவும், வேறொரு சமயத்தில் கசப்பானதாகவும் மாற்றிக் காட்டுகிறது.

நியாயமான அக்கரையில்தான் கேட்டிருக்கிறாள். அக்கரை கரிசனம் அனுதாபம், இவையெல்லாம் இனிமேல் அதிகம் தேவைப்படுமோ..

இல்லையில்லை.. யாருக்கு வேண்டும். இருக்கவே இருக்கிறது ஏழாயிரத்து ஐனூறு.. புதிதாய் வாழ்வை ஆரம்பிக்கவேண்டும். மனதில் முதுமையை அமர்த்தினால், உடம்பில் முதுமை தானாக ஆட்கொண்டுவிடும். படித்த அறிவும், அனுபவித்த அறிவும் துணை இருக்கிறது. வரதன் யோசித்தபடியே தூங்கிவிட்டார். ஒருவேளை யோசிப்பதை வெறுத்தும் தூங்கியிருக்கலாம்.

-----------------

மறு நாள் காலை காப்பி போட்டுக்கொண்டு வந்தார். நிர்மலா வாங்கிக்கொண்டு குடித்து முடித்தாள். "தேங்க்ஸ்".. என்றாள் புன்னகையோடு..

என்ன ஆகிவிட்டது இவளுக்கு.."டோன்ட் பீ ஆர்டிஃபிஷியல்" என்றார் வரதன்.

அவள் கோபப்படவில்லை. அவளுக்குத் தெரியும், அவள் வார்த்தைகளில் போலித்தனம் இல்லையென்று.

"ஒவ்வொரு வார்த்தையையும் சைக்கோ அனாலசிஸ் பன்னிப்பார்க்காதே.. வாழ்க்கையில் ஸ்வாரஸ்யமே போயிடும்." என்றாள்.

"வாழ்க்கை ஸ்வாரஸ்யமா இருக்கா என்ன ?"

"டிபெண்ட்ஸ்.. காப்பி பிரமாதம்." என்றாள். பல வருடங்கள் கழித்து தன் மகளை நோக்கி புன்னகைத்தார், வரதன்.

ஒரு மணி நேரத்தில் ஆபீசுக்கு கிளம்பினாள், நிர்மலா.

"போயிட்டு வரேன்.. " என்றாள்.

"ஜாக்கிரதையா போயிட்டுவா" என்றார், வரதன்.

Monday, January 12, 2009

Golden Globe wins AR Rahman (!)



"நான் நினைத்தால் நினைத்தது நடக்கும்
நடந்தபின் ஏழையின் பூமுகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மழைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவையடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்..."

திறந்துவிட்டது..... !!!
இன்னொரு கதவும் திறக்குமா ?

Saturday, January 10, 2009

கமல்ஹாஸன் - படம் வரைந்து, பாகங்களைக் குறிக்கவும்.

முன்னுரை : கமல் தினத்தந்திக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பதில் (இட்லிவடையிலிருந்து சுட்டது)

விமர்சனங்களுக்கு மதிப்புக் கொடுப்பது உண்டா?

கமல்:- தெருவில் நடந்து போகும்போது, யார் யார் பேச்சுக்கெல்லாம் செவி மடுப்பது என்று எல்லோருக்கும் ஒரு நிர்ணயம் இருப்பது போல்தான் இதுவும்.தெருவில் வழி கேட்பவருக்கோ, மணி கேட்பவருக்கோ பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். "பள்ளம், பார்த்துச் செல்லுங்கள்'' என்பவருக்கு செவி சாய்ப்பது தற்காப்பு.

தன் நிலையே உணராமல் குடித்துவிட்டு போதையில் பினாத்துபவனிடமோ, பெண் குலத்தார் அங்க பாகங்களை கிண்டலடிக்கும் மட்டரகமான ஆட்களையோ, நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். ரொம்பச் சேட்டை கூடிப்போனால் பதிலடியும் கொடுப்போம் அல்லவா? அது மாதிரித்தான் விமர்சனங்களும். நியாயம், தரம் ஆகியவை மட்டுமே என்னை விமர்சனங்களை மதிக்கச் செய்யும்.
----------------

இந்தியா டுடேவின் ஒரு சிறப்பிதழாக - "கமல்ஹாசன் சிறப்பிதழ்" வெளியிட்டிருக்கிறது. சில அரிய படங்களுடன், பலபேரின் பார்வையில் கமல்ஹாசனைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. நண்பர் ஷங்கர் கைங்கர்யத்தில் ஓசியில் படித்துமுடித்துவிட்ட அந்த இதழைப்பற்றி நானும் எழுதியாக வேண்டும் என்ற அல்ப-சபலத்தில் எழுதுகிறேன்.

பாராட்டுக்கள் அனைவரும் அறிந்ததே. அவர் வித்தியாசமாக சிந்திப்பவர், மிகச்சிறப்பாக நடிப்பவர், ஆழ் கருத்துக்கள் பகர்பவர்... அப்படி, இப்படி என்று பாராட்டல்கள் ஒருபுறமிருக்க, பல விதமான வசைச் சொற்களும் அதிகமாக தட்டுப்பட்டன. அதிலும் அதிகமாக "உலக சினிமா" என்ற ('களுக்' என்று சிரிப்பு வருகிறது) கருத்தில் அனேகமாக பலரும் கமல் மீது கோபத்தில் இருப்பதாக உணர்கிறேன்.

மணுஷ்யபுத்திரன் விருமாண்டிக்கும் பருத்திவீரனுக்கும் உண்டான வித்தியாசங்களை அளக்கிறார் (பருத்திவீரன் அவ்வளவு நல்ல படமா ? இன்னும் பார்க்கவில்லை. விருமாண்டி பதினாறு முறை பார்த்தாயிற்று). அருள்மொழி என்பவர் கமல் தனது நாத்திகத்தை திரையில் காண்பித்து தன் ரசிகப்பட்டாளத்தை பகுத்தறிவாளர்கள் ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஒரு ஓவியர் உலக சினிமாக்கள் உண்டாக்கும் தாக்கத்தை கமல் சினிமாக்கள் உண்டாக்குவதில்லை என்கிறார். எல்லாவற்றிர்க்கும் மேலாக சாருநிவேதிதா (இவர் ஒரு எழுத்தாளர் போலும்) கமல் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி சினிமா எடுப்பதை நிறுத்தவேண்டும் என்றும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலே முன்னுரையில் கண்ட கேள்வியின் பதிலிலிருந்தே தெரிந்திருக்கும் எப்படிப்பட்ட விமர்சனங்கள் கமலின் சிந்தனைக்கு வித்திட்டிருக்கும், எத்தனை விமர்சனங்கள் வெறும் காகிதத் திருப்புதலில் கரைந்து போகும் என்று.

ஆனால், ஏனோ ஒரு உந்துதல்.. தலைவனுக்காக ஒரு தொண்டன் வரிந்துகட்டி சண்டைபோடுவதுபோல் (தலைவன் அதை விரும்பாவிட்டாலும்) செய்யவேண்டும் என்ற ஒரு உந்துதல்.. கலைஞனுக்காக ஒரு ரசிகன்

அமீர் இயக்கிய ஒரே ஒரு படத்தை மட்டும்தான் நான் பார்த்தேன் - "மௌனம் பேசியதே". ஆகவே, அவரைப்பற்றியோ, அவரது "பருத்திவீரன்" குறித்தோ எழுத எனக்குத் தகுதி இல்லை. ஆனால், விருமாண்டி ஒரு தரமான படம் என்ற நம்பிக்கையில் அந்த ஒப்பீட்டை நான் வெறுக்கிறேன். விஸ்தாரமான கிராமப்புறச் சூழலுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தமுடியாத சர்சைவாய்ந்த நிலையில், கிண்டி கேம்பகோலா வளாகத்தில் ஒரு கிராமப்படத்தை எடுத்த நேர்த்தி என்னை வியப்பில் ஒவ்வொரு முறையும் திளைக்கச் செய்கிறது. மரண தண்டனை விதிக்கப்படும்பொழுது கேட்கப்படும் / சொல்லப்படும் / வாதிடப்படும் விவாதங்கள் ஒரு சம்பவத்தை ஒட்டி நிகழும்போது, அதில் இரண்டு பேர் சொல்லும் ஒரே நிகழ்வு எப்படி வேறுபட்ட பரிணாமத்தைக் கொடுக்கிறது என்றும், அப்படி சந்தர்ப்பசாட்சியங்களைக் கொண்டு இழைக்கப்படும் மரண தண்டனைகள் விவாதத்திற்கு உரியது என்றும் வாதிடும் ஒரு கதை - விருமாண்டி. இதை ஒரு கமர்ஷியல் சினிமா என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது வேடிக்கை. "உலக சினிமா" பார்க்கும் என்னைப் பொருத்தமட்டில், விருமாண்டி, ஹே-ராம், நம்மவர், மஹாநதி, குருதிப்புனல் ஆகியவை - உலகத் தரம்வாய்ந்த சினிமாக்களே !

நாத்திகம் - கமலஹாஸன் தன்னை எங்கே நாத்திகன் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார் என்று நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.. இன்னும் கிடைத்தப்பாடில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஆத்திகவாதிகளிடம் புழங்கும் மூட நம்பிக்கைகளில் சரியளவு மூடத்தனமான அவ-நம்பிக்கை தங்களை 'நாத்திகர்கள்' என்று கூறிக்கொள்பவர்களிடம் இருக்கிறது. பெரியாருக்கு சந்தனமாலை அணிவித்தால் அதை அவமானமாக நினைக்கிறார்கள். ஆத்திகத்துக்கு நேரெதிர் நாத்திகம் என்று நம்புகிறார்கள். நாத்திகம் போதிக்கும் அனைவரும் ஜாதி வெறுக்கிறார்கள். அடிப்படையில் நாத்திகத்துக்கும் ஜாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு கற்பனையில் அதை இணைத்து அந்தக் கொள்கைகளின் பாதுகாவலராய் தம்மை அற்வித்துக்கொள்வதன் மூலம் தம்மை ஒரு போராளியாக பாவித்து மகிழ்கிறார்கள். உண்மையில் பலபேர் இவர்களைக் கண்டுகொள்வது இல்லை. எனக்கே இப்படி யோசிக்கத்தோன்றுகிறது என்றால் கமலஹாசனுக்கு எவ்வளவு தோன்றியிருக்கும். ஏதோ ஒரு பத்திரிக்கையில் வேலு பிரபாகரன், கமல்ஹாசன் தன் படங்களில் வைணவ சம்பிரதாயங்களை காட்டியிருப்பதாகச் சாடியிருந்தார்.

சமீபத்தில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'இராமநுஜர்' என்ற புஸ்தகம் படித்ததில் கமலது இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்திருக்கும் என்று புரிகிறது. ராமானுஜர் உண்மையில் மற்ற துறவிகளைப் போலல்லாமல் உலக வாழ்க்கையை நேசிக்கிறார். இறக்க விரும்பவில்லை. 'பக்தி' 'ரஸம்' என்று உருகி திளைக்கிறார். அவர் கூறுவதெல்லாம், இறைவன் ஒருவனே ! அவன் ஸ்வரூபமற்றவன் என்று நீங்கள் கூறலாம். நான் அவனை நாராயணனாக பாவித்து வணங்குகிறேன். அவ்வளவுதான் வித்தியாசம் என்கிறார். கிட்டத்தட்ட ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்திருக்கிறார் இராமானுஜர்.

சோ, நாத்திகவாதத்தை கமல் மூலம் திரையில் சொல்லிக்கேட்க வேண்டும் என்று கேட்க முனைபவர்களுக்கு இணையாக, நானும் இன்னும் பல ஸ்லோகங்களையும், பாசுரங்களையும் கேட்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் உண்டு (மர்மயோகியில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு சிவன் ஸ்துதி இருப்பதாக கேள்விப்பட்டேன். நாராயணன் அருளால் நல்லபடியாக வெளிவரவேண்டும்).

அடுத்து - உலக சினிமா உருவாக்கும் தாக்கம். எளிமையாகச் சொல்வதானால்... மாடர்ன் ஆர்ட் ரசிகர்கள் மாதிரிதான் 'உலக சினிமா' விரும்பிகளும் (வேடிக்கயான விஷயம் ஆங்கிலப்படங்களையெல்லாம் உலக சினிமா என்று நம்புவது). எல்லாரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டிய 'Lives of Others' என்ற படம் எனக்குள் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் யாருமே பாராட்டாத 'The Assassination of Jesse James by the coward Robert Ford' என்ற படம் ஆழமான எண்ணப்பதிவுகளை விட்டுச் சென்றது. ஆகவே, உலக சினிமா என்பது லோக்கல் சினிமாதான்... அதன் ரசனையின் அளவுகோல் அனைவருக்கும் பொதுவானதன்று. ஆனால் கதையின் தரமும், சினிமாவின் எல்லை நிலங்களும் கருத்தில் இருந்தால் போதும்.

முக்கியமாக, சினிமா என்பது வாழ்க்கையை யதார்த்தமாக காட்டவேண்டும் என்ற அவசியம் "நிச்சயமாக" இல்லை. முக்கியமாக இந்த இலக்கியவாதிகளிடம் சினிமா பற்றி கருத்து கேட்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் கொசுறாக ஒரு கருத்து - 'கூத்துப் பட்டறைகள்'.. சினிமாவைவிட அவை ஒசத்தி என்ற எண்ணம் பலபேரிடம் (இந்த இதழில்) இருப்பதாகத் தெரிகிறது. கேன்வாஸ் ஓவியத்தைவிட அரிசிமாவு கோலம் ஒசத்தி என்ற எண்ணத்தை ஒத்த கருத்துதான் அது. அது அது அந்தந்த விஷயங்களில் ஒசத்தி..

முடிவுரை :
கேள்வி:- நீங்கள் நடித்த பழைய மசாலாப் படங்களை இப்போது பார்க்கும்போது, குற்ற உணர்ச்சி ஏற்படுமா?

கமல்:- நான் சிறு வயதில் செய்த பிழைகளை திருத்திக்கொண்டு விட்டதால் குற்ற உணர்வு இல்லை. வளர்ந்த உணர்வுதான்.

Friday, January 09, 2009

I Support Satyam Employees - But How ?


This post is just about Satyam's 53,000 plus employees, whose life has been stranded in a sinking ship. It, in now way, is inclined in the interests of the company "Satyam". It is all about their employees.

We all know, what has happened to Satyam in the past few weeks. Now, how can we help Satyam's employees, out of this situation ?

Some senior person in Infosys has instructed his HR not to entertain job-requests from Satyam Employees. That was really absurd to have said in the Open media. I understand one perspective of that statement. However, I don't see a need to express that to the media, and become a role-model or benchmark policy for other companies' recruiting policies.

Clearly, these employees are in trouble. I understand that there are good energies flowing among the Satyam employees and they stand united to get themselves out of this issue.

But I think, the Software fraternity should extend a helping hand to the Satyam employees.

I am from a different company, but I feel the pain and confusion Satyam employees undergo right now.

I somehow feel, I have a call to take. I can either choose to react, or not to.
I think this is the right time. Lets talk.

Add me - keerthivasan@gmail.com or leave a comment
Lets discuss how we can help the Satyam Employees.

Wednesday, January 07, 2009

வைகுண்ட ஏகாதசி



"கோவிந்த நாம சங்கீர்த்தனம் !! கோவிந்தா ! கோவிந்தா !" முழக்கங்களுடன் 2009 இனிதே ஆரம்பித்து உள்ளது.
--

"சத்யமேவ பயதே !" என்று சத்யம் கம்பெனி நேற்று கவிழ ஆரம்பித்த நேரம் சுமார் பதினொன்றரை. அந்தக் கம்பெனியில் அந்த நொடி வரை சி.இ.ஓ. ஆக இருந்த ராமலிங்க ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார். சும்மா செய்யவில்லை.. அந்தக் கம்பெனியின் எதிர்காலத்தையே (அதாவது சுமார் ஐம்பதாயிரம் சாஃப்ட்வேர் தொழிலாளர்களின் எதிர்காலத்தையே) ஊசி முனையில் நிற்க வைத்துவிட்டுப் போய்விட்டார்.

MAYTAS என்ற நிறுவனத்தை வாங்க நினைத்தார் ராஜு. இந்த நிறுவனம், ராஜுவின் மகனால் நடத்தப்பட்டுவரும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (MAYTAS - திருப்பி படிச்சா SATYAM... அடெடே!) சத்யம் போர்ட் உறுப்பினர்கள் அதை நிராகரிக்க, அதற்குள் பங்குதாரர்கள் கடுப்பாகி விற்க ஆரம்பிக்க - அப்பொழுதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை. ரூ. 260ல் இருந்து தட தட என இறங்கி ரூ. 160-ரூ 180க்கு வீழ்ந்தது. இதற்கு நடுவில் "WORLD BANK" வைத்த ஆப்பு வேறு.

எல்லாமாக முடிந்தது என்று நினைக்கும் வேளையில், ராஜு நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தில், Inflated cash balance, Understated liability என்று அத்தனை கோல் மால்களையும் செய்து தான் "சத்யம்" குவார்டர்லி ரிஸல்டுகளில் ரேஞ்சு காமித்துவந்தது என்று தெரிவித்துள்ளார். இந்த "இல்லாத பணத்தை" (ஏழாயிரம் கோடிகள்) ஈடு கட்டுவதற்காகவே, MAYTAS நிறுவனத்தை வாங்க நினைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படிச் செய்திருந்தால், இந்த இல்லாத பணத்தை MAYTASக்கு கொடுத்துவிட்டு, நிம்மதியாக இருந்திருக்கலாம்.

இதனால், நேற்று ரூ. 160ல் இருந்து டம்ம்ம்மால் என்று ரூ. 40க்கு விழுந்துவிட்டது. நம்ம ஊரில் இந்த சாக்ஸ் ஆக்ட்(SOX Act) போன்று ஏதாவது செயல்படுவதே இல்லையோ ? எது எப்படியோ... நான் 2009 பற்றி ஒரு ஜோஸ்யம் சொன்னேனல்லவா ? பாருங்கள்.. ஆரம்பமே அசத்தல்...

இதிலிருந்து தெரியும் விஷயம்... ராமலிங்க ராஜு - திறமைசாலி (இவரது சத்யம் வரலாறு மெய்யாகவே inspiring).. தைரியசாலி.. புத்திசாலி.. ஆனால், 2009ல் அதிர்ஷ்டசாலி இல்லை.. !! குவார்டர் ரிஸல்டுகளில் சின்னதாக ஆரம்பித்த பித்தலாட்டம், கம்பெனியின் ஆணி வேரையே பதம் பார்த்து இருப்பதில் இருந்து உணரும் விஷயம் -

"உண்மையை என்றும் குழி தோண்டி புதைக்க முடியாது"
"சத்யமே கடைசியில் வெல்லும் !".

பெருமாளே !! காப்பாற்று !

Tuesday, January 06, 2009

Monday, January 05, 2009

Dream and Vision !



அபிஷேக்பச்சனை மட்டும் தவிர்த்தால், இந்த சீன் ப்ரமாதமான சீன்.
ஒரு மனிதனின் கனவு.

Sunday, January 04, 2009

Saturday, January 03, 2009

உலக சினிமா - வீட்டுக் கூடத்தில்


UTV புண்ணியத்தில் இந்த "உலக சினிமா" சேனல், என் வீட்டுக் கூடத்தில் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. நாடு, மொழி பேதமில்லாமல் படங்கள் போட்டுத்தள்ளுகிறார்கள். சில படங்கள் பார்க்க வேண்டியவை. பர்மா பஜாரில் கால் தேய தேடி அலைந்தாலும் கிடைக்காத பொக்கிஷங்கள்.. இந்த சேனலில் பார்க்கலாம்.

இதில் "டிக்கெட் வாங்கும் முன் பார்க்கவேண்டிய ஐம்பது படங்கள்" என்றொரு சீரீஸ் வருகிறது (50 movies you must watch before you die). இதில் திரையிடப்படும் படங்கள் அனைத்தும் நம்மை உலுக்குபவை அல்லது உருக்குபவை.

இந்த நிகழ்ச்சி அல்லாது, இன்று மதியம் "பேரடைஸ் நௌ" என்ற படம் பார்த்தேன். பாலஸ்தீன இளைஞர்கள் இருவர், இஸ்ரேலின்மீது தற்கொலைத் தாக்குதல் நடக்கத் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஆரம்பித்து, அந்த இளைஞர்களின் கடைசி நாளை உணர்ச்சி கொப்பளிக்க படம் பிடித்துக் காண்பிக்கின்றனர். இந்தப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், ஒரு மாதிரியாக "ஹெவி" டோஸ் கொடுக்கும் படம்.

அடுத்த படம் போடுவதற்குள் போய் டிவி முன் சென்று ஐக்கியமாகிறேன்