Saturday, March 28, 2009

அல்பசந்தோஷம்



இந்த மாதிரி நாமே ஏதாவது படம் போட்டுக்கொண்டால்தான் உண்டு. இது ஒரு அல்பத்தனமான விளையாட்டு... பழைய படங்களை கூகிளில் தேடிப்பிடித்து டைட்டில் போடுவது.. போஸ்டர் டிசைன் செய்வது... எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி நாளைக் கடத்துவது ?... ஹ்ம்ம்... ஏதாச்சும் உத்திரவாதமா சேதி சொல்லுங்கப்பா !

தலைவன் உணர்ந்துகொள்ள வேண்டியது எல்லாம் "ரசிகன் இருக்கின்றான்" என்பதை...

Jai Ho - The New Gym Song

Sunday, March 22, 2009

Friday, March 20, 2009

மென்சோகம்

மென்சோகம்

காஞ்சிபுரத்தில் சோகத்தில் ஆழ்ந்திருந்த ஒரு கவி !

[கவி என்றால் குரங்கு]

Thursday, March 19, 2009

அவ்யுக்தா இஸ் பேக் !

வெகு நாட்கள் கழித்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். கம்ப்யூட்டரில் ஒரு பிரச்சனை வந்து இப்பொழுதுதான் சரியாகி இருக்கிறது. நல்ல வேளையாக ஆக்குபைடாக இருந்ததால் ரொம்பவும் மிஸ் செய்யவில்லை. ரொம்ப நாள் கழித்து தமிழில் டைப் செய்வதால், நாக்கு மாதிரி, கைகளும் குழறுகின்றன. கொஞ்சம் எழுத்து பழக வேண்டும்.

--



காலையில் ஸ்ரீகாந்த் அனுப்பிய லின்க்.
சே ! என்ன ஒரு குரல். என்ன நளினம். என்ன இனிமை. மொக்கையான ஒரு நடுவராக இல்லாமல், மால்குடி சுபா இந்த சூப்பர் சிங்கரை தூக்கி அணைத்து பரவசமாக சுற்றுவது - இதுதான் மார்க்.

பல மெண்டல் ஜட்ஜ்களைப் பற்றி ஒரு பதிவு போட இருந்தேன். (டைட்டில் - ஒரு Judge + ஒரு Mental = ஜட்ஜ்மென்டல்... நாளை போடுகிறேன்). அது பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது இது வந்தது ஒரு வெல்கம் சேஞ்ச் !

------------------------------------

Tuesday, March 10, 2009

Sunday, March 08, 2009

மகளிர் தினம்



படம் - நன்றி - தினமலர்.காம்

அருங்கல்வி கற்றாள் உலகாண்டாள் மணமானாள்
மக்கட்பேறு பெற்றாள் இன்புற்றிருந்தாள் - மங்கை
மணாளனின் நற்றாள் தொழுதிருந்தாள் - காலத்தால்
வருமுதுமை யுற்றாள் பதியிழந்தாள் துயர்புகுந்தாள்

அப்படியோர் நாளில் பேரிளம்பெண் செய்தித்தாள் வாசித்தாள்

....
இன்னும் மூன்று வரிகளில் இதை முடிக்கவும்.

Saturday, March 07, 2009

Women's Day

Question : "Why not Men's day ?"
Answer : Well, if we dont get a holiday for it, not worth it.

Tuesday, March 03, 2009

ம்ருது..

so..

எங்கள் வீட்டு மாடியில் மலர்மலர் (வினைத்தொகை)..

நறு மலர் கொய்து கார்குழல் சூடும்
கொலையொத்த பாவமும் நன்றே !
அல்லேல் காதல் பூ மீதன்றோ
அன்றி நங்கைக்கோர் வழியில்லை.

- கவிஞர் கீர்த்திவாசன்

Sunday, March 01, 2009

உலகம் ஒரு மெகா சீரியல் மாதிரி.. எந்த இடத்தில் விட்டாலும், திரும்ப இணைந்துகொள்ளும்போது, பெரிதாக ஒரு மாற்றமும் இருப்பதில்லை..