Monday, August 31, 2009
Saturday, August 29, 2009
எனிக்மா
Wednesday, August 26, 2009
ஆய பயனென்கொல்

ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டிபோட்டுக்கொண்டு சிலை வைக்கின்றார்கள். நேற்றைய செய்திகளில், மஹாராஷ்ட்ராவில் 300 அடிக்கு சிவாஜி சிலை ஒன்றை 350 கோடி ரூபாய் செலவில் நிறுவப்போகிறார்களாம். பேஷ் ! மேடம் மாயாவதியின் சிலைகளை வைப்பதற்கு கோர்ட் தடைவிதிக்க முடியாது போலுள்ளது. அவர் சிலையை அவரே திறந்துகொள்ளும் இந்த இரண்டாவது படம் என்னுள் சிரிப்பைத் தாண்டி ஒரு அருவருப்பை உண்டாக்கியது.
நம்ம ஊரில் கர்நாடகக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறந்து, அங்கே போய் திருவள்ளுவர் சிலை திறந்து 'புரட்சி' (!) செய்துவிட்டனர். இதனால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதிகபட்சமாக என்னால் யோசிக்க முடிந்த ப்ரயோஜனம் என்னவென்றால் கலவர நாட்களில் சேதம் செய்ய இரண்டு புதிய சிலைகள் கிடைத்துவிட்டன. அவ்வளவே.
சிலைவைப்பதனால் ஆய பயனென்கொல் அச்சிலையின்
தலை கொய்தல் கலவரத்தின் வினையாம்
ஹ்ம்ம்.. இன்னும் என்னென்ன சிலை வைக்கலாம் என்று மல்லாக்காகப் படுத்து விட்டத்தைப்பார்த்தபடியே யோசித்தேன்.
தமிழக மக்களின் நன்மைக்காக, அண்ணா அறிவாலயத்தில் ஒரு அதிமுக சிலையும், அதிமுக செயலகத்தில் ஒரு திமுக சிலையும் ஒருவருக்கொருவர் திறந்துவைத்துக்கொள்ளலாம்.
ஜின்னாவைப் பற்றி பேசி பேஜாராக மாட்டிக்கொண்ட ஜஸ்வந்த் சிங், ஜின்னாவின் சிலையை டில்லியில் எங்காவது திறந்துவைக்க கோரிக்கை வைக்கலாம். அப்படியே பால கங்காதர திலக்கின் சிலையை லாஹூரில் திறந்துவைத்துவிட்டால் இந்தியா-பாகிஸ்தான் ப்ரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று ஐடியா கொடுக்கலாம்.
அதுசரி, சிவாஜி சிலை முன்னூறு அடி என்றால் நாம் தமிழகத்தில் ஏதாவது செய்யவேண்டுமே.. முன்னூற்று ஒரு அடியாவது கட்டியாக வேண்டும். குமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி தான் இருக்கிறது. யோசித்து ஏதாவது செய்வோம்.
Wednesday, August 19, 2009
Sunday, August 16, 2009
பன்றிக் காய்ச்சல்
சென்னையில் நான் பார்த்தவரையில், பொது மக்கள் அனைவரும் கொஞ்சம் பதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். பேருந்தில் பயணம்செய்யும் ஜன்னலோரவாசிகள் மூக்கை கைக்குட்டையால் மூடியபடியே பயணம் செய்கிறார்கள். சிலபேர் சர்ஜிகல் மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு டாக்டராகவும், நர்ஸாகவும் வலம் வருகிறார்கள். பொது இடத்தில் யாராவது "ஹச் !" என்று தும்மிவிட்டால், சுற்றி இருப்பவர்கள் ந்யூக்லியர் பாம் வந்து பக்கத்தில் விழுந்துவிட்டதுபோல் ரியாக்ஷன் கொடுக்கின்றனர்.
இந்த விழிப்புணர்ச்சி நல்லதுதான். ஆனால் என்ன ஒரு ப்ரச்சனை என்றால், இந்தக் காய்ச்சல் நமக்கு வந்துவிட்டதா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஜலதோஷம், தும்மல், இருமல், காய்ச்சல் எல்லாம் சராசரி இந்தியனுக்கு வருடத்துக்கு நாலு முறை வந்துவிட்டுப் போகிற சமாச்சாரங்கள். இதையே காப்பி அடித்து 'பன்றிக் காய்ச்சலுக்கு' சிலபஸாகப் போட்டதால், குழப்பமாக இருக்கிறது..
என் நண்பர் சொன்னார்.. "சிம்ப்டம்னா பளிச்சுனு தெரியறமாதிரி இருக்கணும். இருமினா கண்ணுல இருந்து ரத்தம் வர்ர மாதிரி.. அப்படி ஒரு யுனீக் சிம்ப்டம் இருந்திருந்தா ஈசியா கண்டுபிடிச்சுடலாம்".. அது சரி !!
குழந்தைகளிடம் இது எளிதாகப் பரவுகிறது என்று டி.வி.க்கள் சொன்னதால், பள்ளி செல்லும் வசதியான குழந்தைகள் எல்லாம் மாஸ்க் அணிந்துள்ளனர். இந்த மாஸ்க் தற்போது விலை ஏறியுள்ளது. பல இடங்களில் இது கிடைப்பதும் இல்லை.. கடும் தட்டுப்பாடு.. நல்ல பிசினஸாக இது மாறியுள்ளது..
Some people die of Swine Flu.. Some people make a living out of it.
ஹ்ம்ம்.. சில விஷயங்களில் இந்தியா உலக நாடுகளோடு அப்-டு-டேட்டாக இல்லாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது. இந்தியா இந்த H1N1 விஷயத்தில் என்ன செய்யவேண்டும் என்ற இந்தச் செய்தி பாஸிடிவ்வாக இருக்கிறது.
எப்படியோ.. எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டு ஷேமமாக இருங்கள்.
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !
இந்த விழிப்புணர்ச்சி நல்லதுதான். ஆனால் என்ன ஒரு ப்ரச்சனை என்றால், இந்தக் காய்ச்சல் நமக்கு வந்துவிட்டதா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஜலதோஷம், தும்மல், இருமல், காய்ச்சல் எல்லாம் சராசரி இந்தியனுக்கு வருடத்துக்கு நாலு முறை வந்துவிட்டுப் போகிற சமாச்சாரங்கள். இதையே காப்பி அடித்து 'பன்றிக் காய்ச்சலுக்கு' சிலபஸாகப் போட்டதால், குழப்பமாக இருக்கிறது..
என் நண்பர் சொன்னார்.. "சிம்ப்டம்னா பளிச்சுனு தெரியறமாதிரி இருக்கணும். இருமினா கண்ணுல இருந்து ரத்தம் வர்ர மாதிரி.. அப்படி ஒரு யுனீக் சிம்ப்டம் இருந்திருந்தா ஈசியா கண்டுபிடிச்சுடலாம்".. அது சரி !!
குழந்தைகளிடம் இது எளிதாகப் பரவுகிறது என்று டி.வி.க்கள் சொன்னதால், பள்ளி செல்லும் வசதியான குழந்தைகள் எல்லாம் மாஸ்க் அணிந்துள்ளனர். இந்த மாஸ்க் தற்போது விலை ஏறியுள்ளது. பல இடங்களில் இது கிடைப்பதும் இல்லை.. கடும் தட்டுப்பாடு.. நல்ல பிசினஸாக இது மாறியுள்ளது..
Some people die of Swine Flu.. Some people make a living out of it.
ஹ்ம்ம்.. சில விஷயங்களில் இந்தியா உலக நாடுகளோடு அப்-டு-டேட்டாக இல்லாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது. இந்தியா இந்த H1N1 விஷயத்தில் என்ன செய்யவேண்டும் என்ற இந்தச் செய்தி பாஸிடிவ்வாக இருக்கிறது.
எப்படியோ.. எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டு ஷேமமாக இருங்கள்.
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !
Subscribe to:
Posts (Atom)



